தமிழகத்தைத் தொடர்ந்து, கோடை வெயில் தாக்கம் காரணமாகப் புதுச்சேரியிலும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்ததை போல், புதுச்சேரிலும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வரும் ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி சற்றுமுன் அறிவித்துள்ளார்.
ஏனென்றால், தமிழ்நாடு, புதுவையில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்க பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டத்தையொட்டி இம்முடிவெடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.
- Advertisement -