ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதிக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் பெரும் விபத்தானது. இதில் நூற்றுக்கணக்கான பேர் பலியானதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்திருந்தது. இந்நிலையில், இந்த கோர விபத்து குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் சிவசங்கர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஒடிசா செல்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அப்போது, அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி, ”ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் சிக்கியுள்ளார்கள் எனச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் இதுவரை வந்துள்ள செய்தி வருத்தம் அளிக்கிறது. நேரடியாக அங்குச் சென்று பார்த்த பின் தகவல் தெரிவிக்கப்படும்” என செல்லவதற்கு முன்பு இவ்வாறு பேட்டியளித்துள்ளார்.
மேலும், இந்த ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் சிறு காயம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள், காலை 8.45க்கு புவனேஷ்வர் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள்
நாளை காலை 6 மணிக்கு சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவித்தார்.
நாளை காலை 6 மணிக்கு சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவித்தார்.
- Advertisement -