இன்று (ஜூன் 3) தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்த நாள். இதைத்தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கருணாநிதி திருவுருவ சிலைக்கு, முதல்வர் ஸ்டாலின் இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்பு ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினார்.
மேலும், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் திமுக தொண்டர்கள், அமைச்சர்கள் கருணாநிதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஆனால், ஒடிசா விபத்து காரணமாக இன்று நடைபெற இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா மறுதேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -