மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறி பாஜக எம்.பி பிரிஷ் பூஷண்னை கைது செய்ய வேண்டும் என போலீஸில் புகார் அளித்தனர். ஆனால், தற்போது வரை போலீஸ் அவர் மீது எந்த நடவடிக்கை எடுக்காததால் மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து டெல்லியில் போராடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மே 28 ஆம் தேதியன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கிச் செல்ல முயன்ற மல்யுத்த வீரர்களைக் கைது செய்தது, அவர்களை அப்புறப்படுத்தினர்.
இதனால், கடும் விரக்தி அடைந்த மல்யுத்த வீரர்கள் நேற்று (மே 30) மாலை கங்கையில் இதுவரை ஜெயித்த ஒலிம்பிக் பதக்கங்கள் அனைத்தும் வீச திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இந்நிலையில், திருமாவளவன் எம்.பி. அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “காமப்பித்து வன்கொடுமைகளைச் செய்த பாஜக எம்.பி பிரிஷ் பூஷணை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்களின் உறுதிமிக்க அறப்போர் வெல்லட்டும். மோடி அரசே, நீதியைக் கொல்லாதே. குற்றஞ்சாட்டப்படும் நபரை பாதுகாத்திட முயற்சிக்காதே” எனத் தனது ஆதரவை ட்வீட் மூலம் தெரிவித்தார்.
- Advertisement -