- Advertisement -
தமிழகத்தில் பல பகுதிகளில் இன்னும் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், அப்பப்போ சில இடங்களில் வெப்பம் சலனம் காரணமாகக் கனமழை பொழிந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, மலை ஒட்டிய பகுதிகளில் இந்த ஆண்டு நன்றாகக் கோடை மழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில், இன்று (மே 30) காலை முதல் சென்னையில் பகல் நேரத்தில் வெயில் கொளுத்திய நிலையில், பல இடங்களில் தற்போது கருமேகங்கள் சூழ்ந்துள்ளன. மேலும், பல இடங்களில் பலத்த வேகத்தில் சூறாவளியாகக் காற்றும் வீசி வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
- Advertisement -