- Advertisement -
இன்று (மே 30) சென்னை தலைமை அலுவலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த தமிழ்நாட்டைச் சார்ந்த என். முத்தமிழ் செல்வி, திரு. ராஜசேகர் பச்சை ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது இவர்கள் உடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு. ஜெ.மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., ஆகியோர் உள்ளனர்.
- Advertisement -