தமிழகத்தின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மீது அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி அண்ணாதுரை கோவை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். ஏனென்றால், இந்த முன்னாள் நிர்வாகி அண்ணாதுரை கோவையில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் வசித்து வந்த வீடு அபகரிக்கப்பட்டதாகவும், இதற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு நேரடியாகத் தொடர்பு இருப்பதாக இந்த புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், அப்படி அபகரிக்கப்பட்ட வீட்டை பா.ஜ.க. சேவை மையம் ஒன்றைத் தொடங்கியிருப்பதாகக் கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
- Advertisement -