தமிழகத்தில் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தீட்சிதர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகவும், தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியிருந்தார்.
இதன் காரணமாக, தேசிய குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் மற்றும் மருத்துவ குழுவினர் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது உண்மையா என்பது குறித்து நடராஜர் கோயிலில் நடத்திய விசாரணையில், அக்கோயிலில் இருவிரல் பரிசோதனை நடைபெற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறியுள்ளனர்.
- Advertisement -