தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பிளஸ் 2 பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியானது. இதையொட்டி, பல தனியார் கல்லூரிகள், அரசு கல்லூரிகள் முதலாம் ஆண்டு மாணவர்களைச் சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அறிவித்திருந்தன. இதனால் பல லட்சம் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வந்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க இன்றே (மே 22) கடைசி நாள் என்றும், மாணவர்கள் www.tngaasa.in என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளனர்.
- Advertisement -