தமிழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராகக் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கே.பி.அன்பழகன் இருந்து வந்தார். அப்போது இவர் வருமானத்துக்கு அதிகமா கே.பி.அன்பழகன் ரூ.11.32 கோடி சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திர மோகன், இவரது மனைவி வைஷ்ணவி ஆகியோர் சம்மந்தப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், தருமபுரி நீதிமன்றத்தில் இன்று (மே 22) காலை 10 மணியளவில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. தற்போது திமுக ஆட்சி அமைந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் மீது தாக்கல் செய்யப்படும் முதல் குற்றப்பத்திரிகை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -