தமிழகத்தில் கடந்த மே 5 ஆம் தேதியன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியிருந்த போது, வங்கக்கடலில் மோக்கா புயல் உருவானதால் பல இடங்களில் கனமழை பெய்து வெயிலின் தாக்கத்தை குறைத்து வந்தது. இந்நிலையில், மே 14ல் இப்புயல் கரையை கடந்த நிலையில், தமிழகத்தில் படிப்படியாக வெப்பம் அதிகரித்தது. அதிலிலும் குறிப்பாக சென்னை, வேலூர் உட்பட பல மாவட்டங்களில் 105 முதல் 107 டிகிரி வரை வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் பதிவானது.
ஆனால், சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக கோடை மழை பெய்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, திண்டுக்கல், கரூர், சேலம் தர்மபுரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.