Tuesday, May 30, 2023 11:11 pm

தமிழகத்தில் அடுத்த 3மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னையில் திடீர் சூறாவளி காற்று : மக்கள் கடும் அவதி

தமிழகத்தில் பல பகுதிகளில் இன்னும் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், அப்பப்போ சில...

எவரெஸ்ட் சிகரத்தில் சாதனை படைத்த முத்தமிழ்செல்வி : அமைச்சர் உதயநிதி பாராட்டு

இன்று (மே 30) சென்னை தலைமை அலுவலகத்தில், இளைஞர் நலன் மற்றும்...

தமிழ்நாட்டில் ரூ.128 கோடி முதலீடு செய்யும் ஜப்பானின் ஓம்ரான் நிறுவனம்

மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் ஜப்பானைச் சேர்ந்த ஓம்ரான் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாகத் தமிழ்நாட்டில்...

வானிலை மையம் வெளியிட்ட தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கோடை வெப்பம் வாட்டி...
- Advertisement -

தமிழகத்தில் கடந்த மே 5 ஆம் தேதியன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியிருந்த போது, வங்கக்கடலில் மோக்கா புயல் உருவானதால் பல இடங்களில் கனமழை பெய்து வெயிலின் தாக்கத்தை குறைத்து வந்தது. இந்நிலையில், மே 14ல் இப்புயல் கரையை கடந்த நிலையில், தமிழகத்தில் படிப்படியாக வெப்பம் அதிகரித்தது. அதிலிலும் குறிப்பாக சென்னை, வேலூர் உட்பட பல மாவட்டங்களில் 105 முதல் 107 டிகிரி வரை வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் பதிவானது.

ஆனால், சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக கோடை மழை பெய்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, திண்டுக்கல், கரூர், சேலம் தர்மபுரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்