கடந்த 1991ஆம் ஆண்டில் மக்களவை தேர்தலுக்காக நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மே 21, 1991ஆம் நாளில் பிரச்சாரம் செய்ய வந்துள்ளார். அப்போது பிரச்சார மேடை அருகே தணு என்ற மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவை போற்றும் விதமாக, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் மே 21ஆம் தேதியில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32வந்து நினைவு தினத்தை முன்னிட்டு ராகுல் காந்தி சென்னை வரவுள்ளார்.
இதற்காக பெங்களூர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பின், மறுநாள் சென்னை சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக தனது தந்தை நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்த உள்ளார்