உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் ட்விட்டர் மிக பிரபலமான ஒன்றாகும். முதன் முதலில் ட்விட்டரின் சிஇஓ-வாக ஜாக் டோர்சி செயல்பட்டு வந்தார். பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய வம்சாவளியை சேர்ந்த பராக் அகர்வால் நியமிக்கப்பட்டார்.அதன்பின், உலகின் பெரும் பணக்காரர் மற்றும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் அவர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 45 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்.
மேலும், இவர் வந்த பிறகு முதற்கட்ட நடவடிக்கையாக பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்ட பலரை பணி நீக்கம் செய்தார். ஆனால், புதிய சிஇஓ பதிவி காலியாகவே இருந்து வந்தது. இதற்காக புதிய நபரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில், புதிதாக பெண் தலைமை நிர்வாக அதிகாரியை (சிஇஓ) தேர்வு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், இவர் 6 வாரத்திற்குள் இந்த பதவியை ஏற்று அவரது பணியை மேற்கொள்வார் என தெரிவித்தார்.
மேலும், இந்த ட்விட்டர் நிறுவனத்தில், தயாரிப்பு மென்பொருள் நிர்வாக தலைவர் மற்றும் தகவல் தொழில்நுட்ப தலைவராக தனது பங்களிப்பு இருக்கும் என எலன் மாஸ்க் அறிவித்தார்.