கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று (நவ.29), தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ரூ. 5,870க்கும், ஒரு சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.46,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.82.20க்கும் ஒரு கிலோ ரூ. 82,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வதற்குப் பின்வரும் காரணிகள் காரணமாக இருக்கலாம். அது, அமெரிக்காவின் பணவீக்கம் அதிகரித்து வருவதால், முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாகப் பார்க்கிறார்கள். இதன் காரணமாகச் சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. மேலும், இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கி வருவதால், தங்கம் வாங்கும் தேவை அதிகரித்துள்ளது.
அதேசமயம், இந்த வெள்ளி விலை உயர்வதற்குப் பின்வரும் காரணிகள் காரணமாக இருக்கலாம். அதன்படி, சர்வதேசச் சந்தையில் வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது. இந்தியாவில் தங்கத்திற்கு மாற்றாக வெள்ளியை வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது என் தெரிவித்தனர்