- Advertisement -
உலகம் முழுவதும் பல ரசிகர்களை கொண்ட ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் செய்யப்படும் பைக் உற்பத்திகள் அனைத்தும் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கிறது.மேலும், நாளுக்குநாள் ராயல் என்ஃபீல்டு பைக்களின் டிமாண்ட் அதிகரித்து கொண்டே வருகிறது.
இதற்காக, தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் 1500 கோடி வரை முதலீடு செய்ய ராயல் என்ஃபீல்டு புதிய திட்டம் தீட்டியுள்ளது. அது திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 60 ஏக்கர் பரப்பில் தனது முதல் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு ஆலையை அமைக்கிறது. இது 2025ம் ஆண்டு முதல் இந்த புதிய ஆலையில் இருந்து வாகனங்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -