கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற மே மாதம் 10ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் பாஜக வேட்பாளர்களை மத்திய அரசு அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த பிரசராசரத்தில் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் போன்றவர்களும் இந்த பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்,பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் பிரதமர் மோடி சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்காக இன்று காலை 9 மணிக்கு டெல்லி இருந்து விமான வழியாக பீதர் மாவட்டம், ஹும்னாபாத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து பேசினார். மேலும், இந்த 2 நாட்களில் 8 மாவட்டத்தில் நடக்கும் 6 பொது கூட்டங்களில் பிரதமர் மோடி பேசவுள்ளார்.