துபாயில் உள்ள குவைத் கடற்கரையில் இருந்து அமெரிக்காவுக்கு சொந்தமான அட்வான்டேஜ் சுவீட் என்ற எண்ணெய் கப்பல் கடல் வழியாக ஹூஸ்டன் நகரில் சென்ற போது, இந்த கப்பலில் 24 இந்திய மாலுமிகள் இதில் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது இந்த கப்பல் மஸ்கட் கடற்கரையில் சென்ற போது, அந்த பகுதியில் ஈரான் படை வீரர்கள் ரோந்தில் இருந்தபோது இந்த அமெரிக்கா கப்பலை சிறை பிடித்தனர்.
ஏனென்றால், இந்த கப்பல் அனுமதியின்றி ஈரான் கடற்கரையிக்குள் வந்ததாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறிகின்றனர். இந்த சிறைபிடிப்புக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. மேலும், கப்பல் சர்வதேச எல்லையில் மட்டுமே பயணித்ததாகவும், ஈரான் கடற்படை தங்களது கப்பலை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், அமெரிக்கா கப்பல் ஈரான் படகு மீது மோதி அதில் பலர் காயம் அடைந்ததாக அங்குள்ள செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.