தமிழகத்தில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இல்லத்தரசிகளுக்கு ரூ. 1000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சட்டசபையில் அறிவித்திருந்தார். இந்த ரூ. 1000 திட்டத்தை பல்வேறு எதிர்க்கட்சிகள், குடும்ப தலைவிகள் விரைவில் அமல்படுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் பேசிய ஒரு சில கருத்துக்கள் தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. இதை பாஜகவை சார்ந்த எஸ் ஆர் சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் பிள்ளைகள் இனி அம்மாவிடம் போய் பேருந்துக்கு காசு கேக்காதே என்றும், நீ பசங்களோட சினிமாவுக்கு போனா அங்க பணம் கேட்காதே, ஒரு செல்போன் வாங்கி வைத்துக் கொள், அதில் நைசாக பேசி என்ன வேணும்னாலும் செய்துகொள் அதற்குத்தான் மாணவிகளுக்கு ரூ.1000 கொடுக்கிறோம் என கூறியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.