தமிழகத்தில் இந்த 2022-2023ஆம் ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கான இறுதி தேர்வு கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் 28ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் அனைத்து வகுப்பினருக்கும் தேர்வு தற்போது நிறைவடைந்து, இன்று முதல் கோடை விடுமுறை என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், இனி வரும் 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான முழுநீள அட்டவணையை தயாரித்து, அதை தற்போது தமிழக அரசு பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளது.
இதில், இந்த 2023-2024ம் கல்வியாண்டில் பள்ளிகள் செயல்படும் நாட்கள் மொத்தம் 216 என்று அறிவிக்கப்ட்டுள்ளது. இதில் மீதியுள்ள 150 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை என அளிக்கப்படும். மேலும், இந்த கல்வியாண்டில் மூன்று பருவத்தேர்வுகள் நடக்கும் நாட்கள்,விடுமுறை நாட்கள் போன்றவற்றை இந்த அட்டவணையில் குறிப்பிட்டு இருக்கிறது. இதில் வரும் முதல் பருவத்தேர்வு செப். 14 முதல் 27 வரை நடக்கும் என்றும், பின்னர் செப்.28 முதல் அக்.2 வரை தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.