தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களில் ஒரு நாள் மட்டும் மின் பராமரிப்பு செய்யப்படும். இந்த பராமரிப்பு பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் ஒழுங்காக நடைபெறவில்லை எனவும் கூறுகிறார்கள். இதன் காரணமாக மின்துறை பல சிரமங்களை சந்தித்து வருகின்றன. இதை தற்பொழுது தடுக்கும் நோக்கில் தமிழக அரசு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அவை என்னவென்றால், இந்த பராமரிப்பு பணிகள் நடக்கும் போது அங்குள்ள மின் சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள் சரிபார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்த பராமரிப்பு பணிகள் பணியாளர்கள் மேற்கொள்ளும் போது அந்த பகுதிகளில் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி மின்தடை செய்யப்படுவது வழக்கமான ஒன்று தான். ஆனால், கடந்த மார்ச் முதல் இந்த மின்தடை எந்த பகுதிகளிலும் நேரவில்லை.
ஏனென்றால், மார்ச் மாதத்தில் மாணவர்களுக்கு நடைபெறும் பொது தேர்வை முன்னிட்டு, இந்த மின்தடை நேராமல் இருந்தது. தற்போது இந்த தேர்வுகள் கடந்த ஏப்ரில் -28யுடன் முடிவடைந்துள்ள நிலையில், இனி தமிழகத்தில் வழக்கம் போல் மின்தடைகள் இருக்கும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.