காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயலும் மாணவர்களில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த 2022-2023 கல்வியாண்டில் இந்த கல்வி உதவித்தொகை பெரும் அனைவரும் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதனால், இனி வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது கோடை விடுமுறையில் மாணவர்கள் இருப்பதால் அதாருடன் கூடிய வங்கி கணக்கை அவர்கள் வீட்டின் அருகிலுள்ள அஞ்சலகம் சென்று மாணவர்கள் தங்களது e-kyc மூலம் வங்கி கணக்கு துவங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.