இந்தியாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடபோன், ஐடியா ஆகும். இதில் முதல் இரண்டு இடத்தை முறையாக ஜியோ மற்றும் ஏர்டெல். இந்நிலையில், கடந்த அக்டோபர் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவையை தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கிடைக்க பெறுகிறது. மேலும், இந்த 5ஜி சேவையில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் கால்கள் அறிமுக சலுகையாக ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் வழங்கி வருகிறது.
அதைபோல், இந்த இரு நிறுவனங்களும் இதுவரை இந்த 5ஜி சேவைக்கு எந்த பிளானும் அறிமுகம் செய்யவில்லை. அதனால் 4ஜி கட்டணத்தையே 5ஜி இணைப்புக்கு வழங்கப்படுகிறது. இதை பயன்பாட்டை 5ஜி போன் பயனர்களுக்கு மட்டுமே பெற்று வருகின்றனர்.ஆனால், இதற்கு வோடபோன் ஐடியா தங்களது அதிருப்தி தெரிவித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அனுப்பியது.
இதுகுறித்து ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அதற்கு விளக்கம் அளித்துள்ளதாகவும் சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளன.