ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி செட்டிபாளையம் அருகே ஆளுக்குடி ஊராட்சி பகுதியில் இன்று தூய்மை பணியாளர்களுக்கு வாகனம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அதில் நிருபர்கள் அரசு பள்ளிகளில் 3% மாணவர்கள் குறைந்தது குறித்து கேள்வி எழுப்பியபோது இதற்கான புள்ளி விவரம் யாரிடம் இருக்கிறது என்று பதிலளித்துள்ளார்.
மேலும், நிருபர்கள் உங்கள் அதிமுக ஆட்சியில் 60,000 மடிகணினிகள் வீணாகிவிட்டதாகவும் அதில் ரூ.80,000 கோடி வரை நஷ்டமானதாக சிஏஜி அறிக்கையில் வெளிவந்ததை குறித்து கேட்ட போது, இந்த சிஏஜி புள்ளி விவரங்கள் வெறும் கணக்குதான் என்றும், அதை அடிப்படையாக மட்டுமே வைத்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், இந்த குளத்தூர் வரை வனச்சரணாலயம் அமைப்பதால் அங்கு வாழும் மக்களின் நலன் குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.