தமிழகத்தில் உள்ள பழைய உழவர் சந்தைகள் இதுவரை புதுப்பிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இந்த உழவர் சந்தையைப் புதுப்பிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 25 உழவர் சந்தைகளைப் புதுப்பிக்க ரூ. 8.75 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
அதன்படி, இந்த ஒதுக்கீட்டால் உழவர் சந்தைக்குக் குடிநீர் இணைப்பு, கழிவறை வசதி, நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் இதன் மூலம் ஏற்படுத்தப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -