இராமநாதபுரம் மாவட்ட வன அலுவலரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோளகக் காப்பகத்தின் இயக்குநருமான ஜகதீஷ் பகன், UNESCO அமைப்பால் வழங்கப்படும் உயிர்க்கோளகக் காப்பக மேலாண்மைக்கான ‘மைக்கேல் பட்டீஸ் விருது’-க்குத் தேர்வாகி உள்ளார். இதையறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ”தமிழ்நாடு வனத்துறைக்கும் அரசுக்கும் பெருமை சேர்த்துள்ளார், அவருக்குப் பாராட்டுகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், அவர் ”நமது அரசு அமைத்த Marine Elite படையால்தான் இது சாத்தியமானது என அவர் கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன். வரும் ஜூன்-14 அன்று பாரிஸ் நகரத்தில் நடைபெறும் நிகழ்வில் விருதைப் பெறவுள்ளதோடு, மன்னார் வளைகுடாப் பகுதியின் இயற்கை வளத்தைப் பாதுகாக்க மேற்கொண்ட முயற்சிகள் குறித்த அறிக்கையையும் உலக அரங்கில் விளக்கிக் காட்டவுள்ள ஜகதீஷ்-க்கு என் வாழ்த்துகள்” என ட்வீட் செய்துள்ளார்.
- Advertisement -