இந்தியாவில் வரும் 2024 நடைபெற்ற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அணிக்கும் எதிராக ஒரு வலுவான எதிரணியை உருவாக்கப் பல எதிர்க்கட்சிகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூன் 12 ஆம் தேதியன்று பீகாரில் உள்ள பாட்னாவில் நடைபெறும் என ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஏற்பட்ட ஒடிசாவின் ரயில் விபத்து காரணமாக இந்த கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என திமுக உட்படப் பல எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்று வரும் ஜூன் 23ஆம் தேதியில் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கோட்டம் நடைபெறும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -