ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் நேற்று முன்தினம் கோரமண்டல் விரைவு ரயில், அடுத்தடுத்த மோதி மோசமான விபத்து நடந்தது. இந்நிலையில், அங்குள்ள அனைத்து ரயில் பெட்டிகளை ராஸ்த கிரேன் மூலம் நீக்கி வழித்தடம் சுத்தமாக்கப்பட்டது. ஏனென்றால், அப்பகுதி மேற்குவங்கம் நோக்கிச் செல்லும் மெய்ன் போக்குவரத்து வழித்தடம் என்பதால் விரைவாகவே அப்புறப்பணி நடைபெற்றது
இந்நிலையில், இந்த கோரமான ரயில் விபத்து நடந்த பஹானாகா ரயில் நிலையத்திலிருந்து, நேற்று இரவு 11 மணிக்கு மீண்டும் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதில் சுமார் 51 மணி நேரத்திற்குப் பின்பு, ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் சரக்கு ரயில் சேவை இயக்கப்பட்டது என்றும், நாளை மறுநாள் பயணிகள் ரயில் சேவை மீண்டும் இயக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியது.
- Advertisement -