நேற்று முன்தினம் ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில் மூலம் அடுத்தடுத்த கோர விபத்து நிகழ்ந்தது. இதையடுத்து, இந்த விபத்து நடந்த 51 மணி நேரத்திற்குப் பின்பு, நேற்று இரவு 11 மணி அளவில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் சரக்கு ரயில் சேவை இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த பாலசோர் வழித்தடம் தான் இந்த மேற்கு வங்கம் நோக்கிச் செல்லக்கூடிய முக்கிய வழித்தடம். ஆகவே, இந்த ஒடிசா விபத்து நடந்த பகுதியை விரைவாகச் சுத்தம் செய்து, தற்போது இந்த பாலசோர் வழித்தடத்திலிருந்து, இன்று (ஜூன் 5) காலை முதல் குறைந்த வேகத்தில் பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -