தமிழகத்தில் இனி அனைத்து வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தப்போவதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த மீட்டர் திட்டம் மூலம் ஆளில்லாமல் மின் பயன்பாடு கணக்கெடுக்கும் முறையை செய்யப்டுத்துவது தான். இது பற்றி தமிழக மின்வாரிய அதிகாரிகள், இந்த ஸ்மார்ட் மீட்டரினுள் மின்னூட்டிகள் மற்றும் மின்மாற்றிகளில் பொறுப்பட்டு தொலைத்தொடர்பு வசதிகளை அஅமைக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
மேலும், அவர் ஸ்மார்ட் மீட்டருக்கான அனைத்து அளவீட்டு வேலைகளும் டோடெக்ஸ் முறையில் செயல்படுத்தவும், அதற்காக சென்னையில் உள்ள தியாகராய நகரில் ஒரு லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் தற்போது பொருத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு சுமார் 13 மாநிலங்களுக்கு ரூ.3,03,758 கோடி வரை ஒதுக்கியுள்ளது.
குறிப்பாக தமிழகத்திற்கு ரூ.10,759 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்த முதல்கட்டமாக 70 சதவீதம் நிதி விடுவிக்கப்பட்டு நவீனமயமாக மீட்டர் பொருத்தப்பட வேண்டிய பணிக்கு அடுத்த வாரம் முதல் டெண்டர் விடுப்படவுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் சற்றுமுன் தெரிவித்துள்ளனர்.