- Advertisement -
பச்சை வழித்தடத்தில், அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தில் மேற்கூரையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து பச்சை வழித்தடத்தில் வழக்கம் போல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
பலத்த காற்றின் காரணமாக அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தின் மேற்கூரையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனை மெட்ரோ இரயில் ஊழியர்கள் சரிசெய்தனர். தற்போது இரண்டு வழித்தடத்திலும் மெட்ரோ இரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.
மெட்ரோ இரயில் பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத திடீர் தடங்கல்களுக்குச் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வருந்துவதாகத் தெரிவித்தது.
- Advertisement -