தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (நவம்பர் 23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதைப்போல் , தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இந்த 8 மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் இன்று (நவம்பர் 23) பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதன்படி, தென் தமிழகத்தில் இன்று (நவம்பர் 23) கனமழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்” என்றார். இந்த நிலையில், தமிழக மாவட்ட நிர்வாகம், மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது எனத் தகவல் வந்துள்ளது