- Advertisement -
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், கோவை மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்படாத நிலையில், இன்று (22.11.2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
அதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை மாவட்டத்தில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. எனவே, இன்று (22.11.2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைப்போல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், கோவை ஆகிய மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
- Advertisement -