தமிழகத்தில் படிக்கும் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் டிசம்பர் முதல் வாரத்தில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறவுள்ளன என சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த 11, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு வரும் டிசம்பர் 7 தொடங்கி 22ம் தேதி வரையும், 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு வரும் டிசம்பர் 11 தொடங்கி 21ம் தேதி வரையும் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது
பொதுவாக இந்த அரையாண்டு தேர்வுகள் மாணவர்களின் கல்வி வளர்ச்சியைக் கண்காணிக்கவும், அவர்கள் கற்ற பாடங்களைப் புரிந்துகொண்டுள்ளனரா என்பதை அறியவும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். எனவே, மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்தி, சிறப்பாகத் தயாராகித் தேர்வில் வெற்றிபெற வேண்டும்.
மேலும், அரையாண்டு தேர்வுக்குத் தயாராகும் போது பின்வரும் குறிப்புகளைப் பின்பற்றலாம். அதில், பாடப்புத்தகங்கள் மற்றும் பாடக்குறிப்புகளை முறையாகப் படிக்கவும், பாடப்புத்தகங்களில் உள்ள வினாடி வினாக்கள், பயிற்சி வினாக்கள் மற்றும் பயிற்சித் தேர்வுகளைத் தவறாமல் விடைக்கவும், தேர்வு முறை மற்றும் மதிப்பீட்டு அளவுகோல்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், தேர்வுக்குத் தகுந்த நேரத்தில் தூங்குவது, ஆரோக்கியமான உணவு உட்கொள்வது போன்றவற்றைக் கவனத்தில் கொள்ளவும் எனக் கூறியுள்ளது.