- Advertisement -
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூரில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதன்படி, இன்று (நவ. 15) காலை 9:30 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் , சென்னை, திருவள்ளூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (15.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -