Saturday, April 27, 2024 11:15 pm

வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட முக்கிய தகவல்!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 16ஆம் தேதி வரை நிலவக்கூடும். இதனால், தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையின் சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, சென்னையில் இன்று அதிகபட்சமாக மெரினா கடற்கரையை ஒட்டிய பகுதியில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது.

ஆகவே, தற்போது வானிலை மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கைகளைப் பொதுமக்கள் கவனத்தில் கொண்டு, பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்