வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 16ஆம் தேதி வரை நிலவக்கூடும். இதனால், தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையின் சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, சென்னையில் இன்று அதிகபட்சமாக மெரினா கடற்கரையை ஒட்டிய பகுதியில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது.
ஆகவே, தற்போது வானிலை மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கைகளைப் பொதுமக்கள் கவனத்தில் கொண்டு, பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.