தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 30 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 23 செ.மீ. அதி கனமழை பதிவாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் நம்பியூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் 12 செ.மீ மழைப் பதிவானது. மேலும் விருதுநகர், குமரி, மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பதிவானது.
இந்த மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு, ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆகவே, மக்கள் வெளியே செல்லும்போது, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.