கோவை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இனிப்பு மற்றும் காரப் பொருட்கள் தயாரிக்கப்படும் இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையில் இதுவரை 900 லிட்டர் எண்ணெய், நிறமிகள் அதிகமாக உள்ள 44 கிலோ லட்டு, 32 கிலோ ஜிலேபி உள்ளிட்ட பொருட்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், கடைக்காரர்களுக்குப் பழைய எண்ணெய்யைப் பொரிக்கப் பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பழைய எண்ணெய்யில் பொரித்த உணவுகளை உட்கொள்வதால் உடல்நலத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழைய எண்ணெய்யில் அதிகப்படியான ஹைட்ரோகார்பன்கள் உள்ளன. இந்த ஹைட்ரோகார்பன்கள் புற்றுநோய், இதய நோய்கள் போன்ற பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
எனவே, இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் உணவு பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும். பழைய எண்ணெய்யில் பொரித்த உணவுகளை வாங்காமல் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துள்ளனர்.