உங்கள் வயிற்றில் உள்ள அழுக்குகளை நீக்க மூலிகை தேநீர் அருந்துவது ஒரு சிறந்த வழியாகும். மூலிகை தேநீர் வடிவில், இஞ்சி, இலவங்கப்பட்டை போன்ற மூலிகைகளிலிருந்து தேநீர் தயாரித்துக் குடிக்கலாம். இந்த மூலிகைகளிலுள்ள ஆண்டிமைக்ரோபியல் பைட்டோகெமிக்கல்கள், உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் கொண்டவை. இதன் மூலம் மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனைகளைக் குறைக்கலாம்.
அதன்படி, வயிற்றில் உள்ள அழுக்குகளை நீக்க உதவும் சில மூலிகை தேநீர்கள் உள்ளது, அதில், இஞ்சி தேநீர் ஒரு சிறந்த செரிமான உதவியாகும். இது வயிற்றுப்போக்கு, வாயு மற்றும் குமட்டல் போன்ற செரிமான பிரச்சனைகளைத் தடுக்க உதவும், இலவங்கப்பட்டை தேநீர் ஒரு சிறந்த ஆண்டிமைக்ரோபியலாகும். இது வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.
அதைப்போல், இந்த மஞ்சள் தேநீர் ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு மருந்தாகும். இது வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது, துளசி தேநீர் ஒரு சிறந்த ஆண்டிஹீஸ்டமின் ஆகும். இது வயிற்றுப்போக்கு மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. மேற்கண்ட இந்த மூலிகை தேநீர்களைத் தினமும் 2-3 முறை குடிக்கலாம்.