நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “லியோ” திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இந்த ”லியோ” படத்தின் ரசிகர்கள் காட்சியை அதிகாலை 4 மணிக்குத் திரையிட அனுமதிக்க வேண்டும் எனப் பட நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது . அதன்படி, இன்று காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக விசாரணைக்கு வர உள்ளது.
இந்த பட நிறுவனத்தின் வழக்கறிஞர், அதிகாலை 4 மணிக்குத் திரையிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். மேலும், வரும் அக் . 20ம் தேதி முதல் அக் . 24ம் தேதி வரை அரசால் அனுமதிக்கப்பட்ட சிறப்புக் காட்சிகளை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
அதேசமயம், தமிழக அரசின் வழக்கறிஞர், அதிகாலை 4 மணிக்குத் திரையிட அனுமதிக்கப்படுவதால், பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும் என்று தெரிவித்தார். மேலும், 7 மணிக்குத் திரையிட அனுமதிப்பது சரியான தீர்வாகும் என்று வாதிட்டார்.
இந்த வழக்கு விசாரணை முடிவடையாததால், நேற்று உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. ஆகவே, இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. மேலும், இந்த வழக்கின் தீர்ப்பைப் பொறுத்து, லியோ படத்தின் ரசிகர்கள் காட்சியை அதிகாலை 4 மணிக்குத் திரையிட அனுமதிக்கப்படுமா ? இல்லையா ? என்பது தெரியவரும்.