- Advertisement -
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இந்த மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகவே, இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள், மழை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் பட்சத்தில், சாலைகளில் தேக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல், மழை பெய்யும் போது, கட்டிடங்கள் மற்றும்மரங்கள் ஆகியவற்றிலிருந்து விலகி இருப்பது அவசியம்.
- Advertisement -