Monday, April 29, 2024 8:47 pm

செந்தில்பாலாஜி ஜாமின் மனு : இன்று விசாரணை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையீடு செய்துள்ளார். அதேசமயம், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இதுவரை 2 முறை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த வழக்கில் அமலாக்கத்துறை சார்பில், செந்தில் பாலாஜி தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், அவர் வெளிநாட்டில் தப்பி ஓட முயற்சிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சார்பில், அவருக்கு எந்த விதமான குற்றச்சாட்டும் இல்லை என்றும், அவர் ஜாமீனில் வெளியே வந்தால் விசாரணைக்கு ஒத்துழைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் எந்த தீர்ப்பை வழங்குவார் என்பது இன்று விசாரணைக்குப் பிறகு தெரியவரும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்