சென்னை, பல்லவன் அலுவலகம் முன்பு, திமுக அரசைக் கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தலைமையில் இன்று(அக்.9) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் “போக்குவரத்துத் தொழிலாளர்களின் 15-ஆவது ஊதிய உயர்வு, போக்குவரத்துத் துறையில் டெண்டர் முறையில் ஆட்களைத் தேர்வு செய்வதைக் கைவிடவும், 100 நாட்களுக்குள் வழங்குவதாக உறுதியளித்த பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும்” உள்ளிட்டவைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் காலை 10.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர், போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அதிமுக எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினர். மேலும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.