- Advertisement -
விசிக தலைவர் திருமாவளவன் தற்போது காய்ச்சல் காரணமாகச் சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று (செப். 27) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு திருமாவளவனிடம் நலம் விசாரித்துள்ளார்.
இந்த விசாரிப்பின் மூலம், தற்போது பாஜகவுடனான கூட்டணியிலிருந்து அதிமுக விலகிய நிலையில் ஈபிஎஸ், திருமாவளவனின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
- Advertisement -