- Advertisement -
தற்போது உள்ள அரசியல் சூழலில் அதிமுக-பாஜக இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று(செப்.25) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பிற்பகல் 4 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
அதன்படி, இக்கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -