- Advertisement -
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த பிள்ளைச் சாவடி கிழக்கு கடற்கரைச் சாலையில், இன்று காலை அவ்வழியாக வழக்கம் போல் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பில் மோதி பேருந்து பெரும் விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை உடனடியாக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.
- Advertisement -