- Advertisement -
விளக்கேற்றும் போது எப்போதும் இரண்டு திரியாக இணைத்துப் போட வேண்டும். திரி கருகும் முன் என்னை காலியாகும் முன் மலர்களால் நெருப்பினை அணைத்து விட வேண்டும். மீண்டும் அதில் விளக்கேற்றலாம் திரி கருகிவிட்டால் நிறம் மாறிவிட்டால் மட்டும் அதை மாற்றினால் போதுமானது. வாரம் ஒருமுறை விளக்கேற்றுபவர்கள் விளக்கேற்றும் திரியை அப்படியே விட்டுவிட்டால் திரி பச்சைக் நிறமாக மாறிவிடும் இதனால் வீட்டில் பணத்தடை ஏற்படும்.
மேலும், நீங்கள் வாரம் ஒரு முறை விளக்கேற்றும் போது விளக்கினை நன்றாகத் தேய்த்து விட்டு ஏற்றுவது நல்லது. திரியை எக்காரணம் கொண்டும் கருக விடக்கூடாது. திரி கருகினால் வீட்டில் நிச்சயம் பிரச்சனைகள் வரும். விளக்கேற்றிய திரியைக் குப்பையில் போடக்கூடாது இதனால் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி வெளியே சென்று விடுவாள். திரிகளை ஒரு பவுலில் போட்டு வைத்து கொஞ்சம் சேர்ந்ததும் இரவு தூபக்காலில் போட்டு திருஷ்டி கழித்து வீட்டு வாசலில் அதனை எரித்து விடுங்கள். இதனால் வீட்டில் உள்ள துஷ்ட சக்திகள் நெருப்பில் பஸ்பம் ஆகிவிடும். திரிகள் கருகி கரியாகி முடிந்ததும் அதனைக் கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். இதனால் வீட்டில் உள்ள அனைத்து கஷ்டங்களும் நீங்கும், நேர்மறை ஆற்றல்கள் பெருகும், காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
- Advertisement -