- Advertisement -
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23) வெள்ளி ரதத்தில் உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி பவனி வந்தனர். அதன்படி, இன்று காலை, மூஷிக வாகனத்தில் விநாயகரும், யானை வாகனத்தில் சந்திரசேகரரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பின்னர் , வெள்ளி ரதத்தில் உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி, மாட வீதிகளில் பவனி வந்தனர். மேலும், இந்த பவனி காட்சியைக் காண, தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்திருந்தனர்.
தற்போது கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் நாளை (நவம்பர் 24) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -