- Advertisement -
பொதுவாகக் காமாட்சி அம்மன் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தைப் போட்டு அதன் பின்பு திரி போட்டு தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வது வழக்கம். இதே போல் நீங்கள் காமாட்சி விளக்கில் போடும் நாணயத்தில் தங்க கலரில் உள்ள ஐந்து ரூபாய் நாணயம் போட்டு அல்லது ஒரு கிராமுக்குக் குறைவாகத் தங்கத்தினால் செய்யப்பட்ட மகாலெட்சுமியின் உருவம் பொறிக்கப்பட்ட தங்க நாணயத்தைப் போட்டு, காமாட்சி அம்மன் விளக்கில் நெய் ஊற்றித் திரி போட்டு தீபம் ஏற்ற நம் வீட்டில் உள்ள பணக்கஷ்டம், மனக் கஷ்டம் போன்ற பிரச்சனைகள் படிப்படியாக நீங்கி நம்முடைய வாழ்க்கை காலப் போக்கில் தங்கம் போல மின்னத் தொடங்கி விடும்.
மேலும், நீங்கள் தங்க நாணயத்தைப் போடும் போது நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும், தினமும் செய்ய முடியாதவர்கள் வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை செய்வது சிறப்பு. முடிந்ததும் தங்க கலர் நாணயத்தை எடுத்துத் துடைத்து வைக்கலாம்.
- Advertisement -