- Advertisement -
தலைநகர் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நாளை (செப். 9) ஜி20 மாநாடு தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ளப் பல உலக நாட்டுத் தலைவர்கள் வருகின்றனர். இதனால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நடமாடும் காவல் நிலையம் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்காக ஒரு வேன் காவல் நிலைய வடிவமைப்பில் மாற்றப்பட்டு அதில் 5 காவலர்கள் அமரும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் இன்டர்நெட் வசதியும், மாநாட்டின் முக்கிய செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்கும் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.
- Advertisement -