- Advertisement -
திருப்பதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் அலிபிரி மலைப்பாதையில் பாத யாத்திரை சென்ற சிறுமியைச் சிறுத்தை தாக்கிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஆப்ரேஷன் சிறுத்தை திட்டத்தில், ஆங்காங்கே சிசிடிவி கேமரா வைத்து வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
இதையடுத்து, ஏற்கெனவே 4 சிறுத்தைகள் பிடிக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது என வனத்துறையினர் தகவல் அளித்துள்ளனர்
- Advertisement -